Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நிதி பற்றாக்குறை 6.8 சதவீதம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நிதி பற்றாக்குறை 6.8 சதவீதம்..!

ரிசர்வ் வங்கி இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கை குழுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் வெளியிட்ட செய்தி குறிப்பு:

3

”குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தற்போதுள்ள 4 சதவீதம் என்ற அளவிலேயே வட்டி வீதம் தொடர்கிறது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதத்தில் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் 115 புள்ளிகளை வட்டியில் குறைத்தாலும் கடந்த 8 மாதங்களாக எந்தவிதமான வட்டிக்குறைப்பும் செய்யவில்லை.

வங்கிகள் தங்கள் டெபாசிட்களை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தொகைக்கான வட்டியான ரிசர்வ் ரெப்போ ரேட் தொடர்ந்து 3.35 சதவீதம் அளவிலேயே இருக்கும். இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டில், 2021&-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதம் அளவில் இருக்கும். நிதிப் பற்றாக்குறையின் அதிகபட்ச அளவு 6 சதவீதம் தான். ஆனால், கொரோனா வைரஸ் பரவலில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் பற்றாக்குறை 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

சென்ற முறை நாணயக் கொள்கைக் கூட்டம் நடைபெற்ற பிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படத் தொடங்கியுள்ளதாகவும், கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.