Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீட்டு வசதி வாாரியம் – நிலுவைத் தொகை செலுத்த அறிவிப்பு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மிழ்நாடு வீட்டு வசதி வாரியம்,  திருச்சி வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட நவல்பட்டு, வாளவந்தான்கோட்டை,  முசிறி, துறையூர் மற்றும் மணப்பாறை ஆகிய திட்டப்பகுதிகளில் வீடு மற்றும் மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் வாரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்தும் காலம் முடிவுற்றும், தமிழ்நாடு அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் நீண்டகாலமாக பலர் நிலுவைத்தொகையை செலுத்த முன்வரவில்லை.

ஆகையால், ஒதுக்கீடுதாரர்கள் இவ்வறிவிப்பை கண்டவுடன் தங்களிடம் உள்ள ஒதுக்கீடு ஆணை, தொகை செலுத்திய ரசீது மற்றும் அசல் ஆவணங்களுடன் திருச்சி வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தை அலுவலக வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு கணக்கினை நேர் செய்து, நிலுவைத் தொகைகளை செலுத்தி, வாரிய விதிமுறைகளின்படி கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு,  ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்யும் நடவடிக்கையை ஒதுக்கீடுதாரர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவா், திரு.மா.பிரதீப் குமாா் இ.ஆ.ப.,  அவா்கள் தொிவித்துள்ளாா்.

 

செய்தி வெளியீடு:

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

உதவி இயக்குநா்,

செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம்,

திருச்சிராப்பள்ளி.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.