ஆதார் இல்லையென்றால் நோ!
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை பென்சன் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற/கைவிடப்பட்ட மனைவிகள் ஓய்வூதியத் திட்டம், முதல்வர் உழவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஆகிய 8 பென்சன் திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற ஆதார் கார்டு கட்டாயம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆதார் கார்டு பெறும் வரை பென்சன் பெறுவதற்கு ஆதார் கார்டு விண்ணப்பித்ததற்கான கோரிக்கை ஆவணம் காட்ட வேண்டும் என்றும், அத்துடன் வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.