தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில்
“இந்தியாவில் தமிழகம் முதலிடம்”
மத்திய அரசின் நிதித்துறையின் கீழ் இயங்கும் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவசுப்ரமணியன் ராமன் சமீபத்தில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பகுதிகளை மேம்படுத்த ரூ.524 கோடி நிதி உதவிக்கான கொள்கை அளவிலான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார்.
“முதல்கட்டமாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும், திட்டங்களை நிறைவேற்றியவுடன் கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம்
முதல் மாநிலமாக இருந்து வருகிறது” என்றும்
தெரிவித்தார்.