Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உங்களது வங்கிக் கணக்கிலிருந்தும் ரூ.436 பிடித்தம் செய்யப்படுகிறதா? அதற்கான காரணம் என்ன? அதனை நிறுத்துவது எப்படி?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்திய பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் புதிதாக சேமிப்புக் கணக்கு திறப்பவர்களுக்கு பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையில் ஆயுள் காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.

உங்களது வங்கிக் கணக்கிலிருந்தும் ரூ.436 பிடித்தம் செய்யப்படுகிறதா? அதற்கான காரணம் என்ன? மற்றும் அதனை நிறுத்துவது எப்படி? என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் புதிதாக சேமிப்புக் கணக்கு திறப்பவர்களுக்கு பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையில் ஆயுள் காப்பீடு செயல்படுத்தப்படுகிறது.

எஸ்பிஐ அல்லது வேறு ஏதேனும் வங்கிகள் அல்லது தபால் அலுவலகத்தில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், ஆட்டோ டெபிட்டில் சேரவோ அல்லது செயல்படுத்தவோ ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், 18 முதல் 50 வயது வரம்பில் உள்ளவர்கள் பிரதான் மந்திரி ஜீவன்ஜோதி பீமா யோஜனா (PMJJBY)-க்கு தகுதி பெறுகிறார்கள்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வங்கிக் கணக்குகளுக்கான KYC செயல்முறைக்கு ஆதார் முதல் மற்றும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதன்படி, ஜூன் 1 முதல் மே 31ஆம் தேதி வரையிலான, 2 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் 12 மாத கால அவகாசம் புதுப்பிக்கத்தக்கது. இதன் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபர் எந்த காரணத்திற்காக இறந்தாலும், காப்பீட்டுத் தொகையான ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

தொடர்புடைய நபர் தேர்ந்தெடுக்கும் திட்டத்தைப் பொறுத்து, வருடாந்திர பிரீமியம் கணக்கிடப்படும். அதன்படி, பொதுவாக ரூ.436 பிரீமியமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வருடாந்திர காப்பீட்டு காலத்திலும், மே 31 அல்லது அதற்கு முன் காப்பீடு செய்துள்ள நபரின் வங்கிக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட தொகை தானாக டெபிட் செய்யப்படும். இந்தத் திட்டம் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பிற அனைத்து ஆயுள் காப்பீட்டாளர்களாலும் வழங்கப்படுகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா: வங்கிக் கணக்கிலிருந்து ரூ.436 டெபிட் செய்வதை நிறுத்துவது எப்படி?

  • எந்த காரணத்திற்காகவும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனாவைத் தொடர முடியாவிட்டால், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வருடாந்திர ஆட்டோ-டெபிட் செயல்முறையை ரத்து செய்ய வேண்டும். இதனை செய்ய, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட கணக்கு இருக்கும் வங்கி கிளைக்குச் செல்ல வேண்டும்.
  • அங்கு, தேவையான செயல்முறைகளை முடித்து, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பிரீமியம் கட்டணத்தை நிறுத்துமாறு கோரிக்கை வைக்க வேண்டும். ஒருவேளை உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் சரியான நேரத்தில் செலுத்தப்படாவிட்டால், உங்கள் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும்.
  • அதுமட்டுமின்றி, உங்கள் வங்கிக் கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டாலும், பிரீமியம் ஆட்டோ டெபிட் ஆகாது. இதன் காரணமாகவும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ரத்து செய்யப்படும்.

மக்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக, நரேந்திர மோடி அரசு கடந்த 2015ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.