ரூ.1 கோடி கிளைம் கிடைக்கும் எல்.ஐ.சி. பாலிசி
முதிர்வு காலத்தில் உங்களது சிறு சேமிப்புப் பணத்தை ஒரு பெரிய தொகையாக மாற்ற உதவும் திட்டங்களில் ஒன்று எல்.ஐ.சி.யின் பாலிசி ஜீவன் பிரகதி பாலிசி திட்டம். 12 வயதுக்கு மேற்பட்ட 45 வயதிற்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணையலாம். குறைந்தது 12 ஆண்டுகளாவது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சேமிக்கலாம்.
ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் கிடைக்கும். இத்திட்டத்தில் இறப்புக்கான காப்பீடு வசதியும் உள்ளது. பாதுகாப்பான இடத்தில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்ய விரும்பினால் இது உங்களுக்கு சிறந்த திட்டமாக இருக்கும். இந்த பாலிசி எடுத்து மூன்று வருட பிரீமியங்கள் செலுத்திய பிறகு கடன் வசதியும் உண்டு. அதே போல மூன்று ஆண்டுகள் பிரீமியம் செலுத்திய பிறகு சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியில் ரைடர் பாலிசி எடுக்க வயது 18 ஆகும். கூடுதலாக இந்த திட்டத்தில் 15,000 ரூபாய் பென்ஷனும் கிடைக்கும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீடு தொகை 1.5 லட்சம் ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு இல்லை. தவணை தொகையை மாதம், அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை என கொடுக்கலாம். இதில் விபத்து காப்பீடாக குறைந்தபட்சம் ரூ.10,000மும், அதிகபட்சம் ரூ.1 கோடியும் க்ளைம் செய்ய முடியும். இறப்பு பலனாக அடிப்படை காப்புத் தொகையுடன் போனஸீம் கிடைக்கும். பாலிசியில் செலுத்தும் பிரீமிய தொகை ஆண்டு பிரீமியமாக தேர்ந்தெடுத்தால், பிரீமியத்தில் 2% தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தினால் 1% பிரீமியமும் கிடைக்கும்.