Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உத்தரவாத வருவாய் தரும் எல்.ஐ.சி-யின் தன்சஞ்சய்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உத்தரவாத வருவாய் தரும் எல்.ஐ.சி-யின் தன்சஞ்சய்

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி) ‘தன் சஞ்சய்’ என்ற பெயரில் புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பங்குச் சந்தையுடன் இணைக்கப்படாத, தனிநபர் சேமிப்புக் காப்பீட்டுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது பாலிசிதாரர்களுக்கு காப்பீடு மற்றும் சேமிப்பை வழங்குகிறது. இது முதிர்வுக் காலத்தில் உத்தரவாதமான வருவாயை வழங்கும் திட்டமாகும்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இந்தப் புதிய திட்டம் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 15 ஆண்டுக்காலத்துக்கு கிடைக்கிறது. பாலிசிக்கான பிரீமியத்தை பாலிசிதாரர் ஒரே தவணையாகவோ, தங்களுக்கு ஏற்ற வகையிலோ செலுத்தும் வசதி உள்ளது.

பாலிசிதாரர் எதிர்பாராத வகையில் இறந்துவிட்டால், அவர் தேர்வு செய்தபடி அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை மொத்த மாகவோ, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தொகையாகவோ வழங்கப் படும். அவசரத் தேவைக்கு பாலிசித் தொகையிலிருந்து கடன் பெற்றுக்கொள்ளவும் வசதி உள்ளது. பாலிசி காலத்துக்கேற்ப 3 வயது முதல் இந்த பாலிசித் திட்டத்தில் சேர முடியும். எல்.ஐ.சி முகவர்கள் மூலமோ, கிளைகள் மூலமோ, சேவை மையங்கள் மூலமோ இந்த பாலிசித் திட்டத்தில் சேர முடியும்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.