நகைச்சீட்டில் இத்தனை சிக்கலா?
சீட்டுக் காலம் முடிவதற்கு முன்பாகவே சீட்டை நிறுத்தும் பட்சத்தில் அதற்குத் தனி கட்டணங்கள் உண்டு. கூடவே பாதியில் நிறுத்தப்படும் சீட்டுக்கான நகையை சிற்றூர் மற்றும் கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான நகைக்கடைகள் உடனடியாகக் கொடுப்பதில்லை.
பல கடைகளில் சீட்டுத் தொகைக்கு ஈடாகத் தங்க நாணயங்கள் அல்லது பிஸ்கட்கள் கொடுக்கப்படுவதில்லை. ஆபரணங்கள்தான் வாங்க வேண்டும். அதற்கும் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி எல்லாம் போட்ட பின்தான் கொடுப்பார்கள்.
அதனால் சேமிப்பு என்ற கோணத்தில் பார்த்தால் வாடிக்கையாளர்களுக்கு இது லாபமான சேமிப்பு எனச் சொல்ல முடியாது.
பல கடைகளில் எத்தனை மாதங்கள் சீட்டு போட்டு வந்தாலும் சரி, கடைசி தவணை எந்த நாளில் முடிகிறதோ அன்றைய தங்கத்தின் விலைக்குத்தான் நகை வாங்க முடியும். உதாரணமாக, சீட்டு முடிந்து சில மாதங்களுக்குப் பின் நகை வாங்கும்போது, கடைசி தவணை கட்டிய நாளில் தங்கத்தின் மதிப்பு என்னவாக இருந்ததோ அதே விலைக்குத்தான் வாடிக்கையாளர்கள் நகை வாங்க முடியும்.
இதிலிருக்கும் பெரும் சிக்கல், ஒருவேளை வாடிக்கையாளர் நகை வாங்கும் நாளன்று தங்கத்தின் அன்றைய சந்தை விலை, கடைசித் தவணையின் போதிருந்த விலையைவிடக் குறைவாக இருந்தாலும் லாபம் அடையப்போவது கடைக்காரர்தான்.
ஆபரண தங்கம் அழகுக்காக வாங்கலாம். ஆனால், அது ஒரு நல்ல முதலீடா என்றால், இல்லை என்கின்றார்கள் வல்லுநர்கள்.
ஏனெனில், நாம் வாங்கிய ஆபரணத்தை விற்கும்போது செய்கூலி, சேதாரம் கழிந்தது போகத்தான் வாங்குவார்கள். அதிலும் பல கடைகளில் பழைய தங்கம் என்று இன்னும்கூட பணத்தை குறைப்பது உண்டு. இதனால் லாபம் என்பது பெரிய அளவில் இருக்கும் என்று சொல்ல முடியாது.
இத்தனை சிக்கல்கள் இருக்கின்றதே, அப்படி எனில் நகைச்சீட்டு கட்டாமல் தங்கம் எப்படி சேர்க்க முடியும் என்ற கேள்வி எழலாம். அதற்கு வேறு வழி உள்ளது தோழிகளே!
தங்கத்தில் முதலீடு என்பதே நீண்டகால அடிப்படையில் செய்வதுதான். தங்கத்தில் முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில், கோல்டு இ.டி.எஃப் பரிந்துரைக்கேற்றது.