Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

 இது மாடி வீட்டு வருமானம்! தொடர்- 4 வாசனைவீசும் மல்லிகைப்பூ வருமானம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 இது மாடி வீட்டு வருமானம்! தொடர்- 4 வாசனைவீசும் மல்லிகைப்பூ வருமானம்

நம்மில் பலர் வீட்டு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகம் செடிகளை வைத்து வளர்க்க மிகவும் ஆசைபடுவோம். அந்த வகையில் பூ செடிகள் முதல் இடத்தை பெற்றுள்ளது.  ஆமாங்க வீட்டில் தோட்டம் வைக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், அதிகமாக பூ செடிகளை வைத்து வளர்க்க விரும்புவார்கள். இருப்பினும் அதற்கான பராமரிப்பு முறைகளை பின்பற்ற மாட்டார்கள்.

பொதுவாக பூ செடிக்கு ஒழுங்கான பராமரிப்பு முறை இருந்தால் மட்டுமே அந்த பூ செடி அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். அந்த வகையில் மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம்  தெரிந்து கொள்வோம் வாங்க.

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்: மல்லி செடி பொறுத்தவரை இரண்டு வகை உள்ளது ஒன்று செடி வகை மற்றொன்று கொடி வகை. இவற்றில் நாம் கொடி வகை மல்லிகை செடிகளை வாங்கினால் நன்றாக பூக்கள் பூக்கும். அதேபோல் தண்டு நன்கு தடிமனாக இருப்பது போல் மற்றும் கிளைகள் இரண்டு மூன்று இருப்பது போல் பார்த்து வாங்க வேண்டும். மாடித்தோட்டத்தில் மல்லிகை பூ செடி வைப்பவர்கள் 50 லிட்டர் வாட்டர் கேனில் வைத்து வளர்க்கலாம் இருப்பினும் மணல் கலவையை தயார் செய்து செடிகளை நட வேண்டும். அப்போதுதான் செடியில் பூக்கள் நன்றாக பூக்கும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க மண் கலவை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

மல்லி பூ செடிக்கு செம்மண் மிகவும் சிறந்தது, செம்மண் இல்லை என்றால் உங்கள் பகுதியில் என்ன தோட்டமண் கிடைக்கிறதோ அவற்றில் ஒரு பங்கு எடுத்துக்கொள்ளுங்கள், கோகோ பெட் ஒரு பங்கு, வேப்பம்பிண்ணாக்கு 100 கிராம், தொழு உரம் என்று சொல்ல கூடிய நன்கு மக்கிய மாட்டு சாணம் ஒரு பங்கு, உயர் உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ட்ரைக்கோ டெர்மா விரிடி ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கொண்டு மண் கலவை தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்த மண்ணில் மல்லிகை பூ செடியை வளர்த்தால் செடி நன்கு வளர்ந்து வருடம் முழுவது பூக்கள் நன்றாக பூத்து குலுங்கும்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

மல்லி பூ செடியினை நன்கு வெயில் படும் இடத்தில் வைத்துதான் வளர்க்க வேண்டும். அப்போது தான் செடி நன்றாக வளரும். மல்லி பூ செடியினை தோட்டத்தில் வைத்து வளர்ப்பவர்களாக இருந்தாலும் சரி, மாடி தோட்டத்தில் வைத்து வளர்ப்பவர்களாக இருந்தாலும் சரி வருடத்திற்கு இரண்டு முறை, செடியின் மேல் மண் பகுதியினை 2 அல்லது 3 இஞ் அளவு கொத்தி விட்டு நன்கு மக்கிய ஆட்டு சாண எரு அல்லது மாட்டு சாண எருவினை 4 அல்லது 5 கைப்பிடி அளவு போட்டு மேல் மண் அணைக்க வேண்டும். இவ்வாறு ஜூன் மாதம் ஒரு முறையும், டிசம்பர் மாதம் ஒரு முறையும் செய்து வர வேண்டும். இவ்வாறு செய்வதினால் செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும், இதனால் மல்லிகை பூ செடி என்றும் பூக்கள் பூத்து கொண்டே இருக்கும்.

மல்லி பூ செடிக்கு வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை அனைத்து வகை உரங்களில் ஏதேனும் ஒன்றினை செடிகளுக்கு கொடுக்கலாம். அதாவது பிண்ணாக்கு கரைசல், காய்கறி கழிவுகள், மீன் அமினோஅமிலம், பஞ்சகாவிய, அமிர்தக்கரைசல், டீத்தூள், முட்டை ஓடு, வாழைப்பழ தோல் போன்று அனைத்து வகை இயற்கை உரங்களையும் மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க பயன்படுத்தலாம்.

மல்லி செடிக்கு வெயில் காலங்களில் காலை அல்லது மாலை வேளையில் செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டும். குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் மண்ணின் ஈரப்பதம் பொறுத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். சில நேரங்களில் மல்லிகை பூ செடியின் இலை மஞ்சளாக மாறும், காரணம் நைட்ரஜன் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம், அந்த சமயத்தில் செடிகளுக்கு பிண்ணாக்கு கரைசல் அல்லது மீன் அமிலம் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதினால் செடி நன்றாக வளரும், இதனால் செடியில் பூக்கள் பூத்து கொண்டே இருக்கும். மல்லி பூ செடி பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஓருமுறை காவந்து செய்ய வேண்டும். அதாவது களை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

செடிகளின் பக்கத்தில் வேறு ஏதாவது செடி வளர்ந்து இருந்தால் அந்த செடிகளை பிடிங்கி எறிய வேண்டும். மேல் மண் கொத்திவிட வேண்டும். இவ்வாறு கொடுப்பதினால் செடி நன்றாக வளரும், இதனால் செடியில் பூக்கள் பூத்து கொண்டே இருக்கும். மேல் கூறப்பட்டுள்ள டிப்ஸினை பின்பற்றி வந்ததால் மல்லிகை பூ செடியில் பூக்கள் பூத்து கொண்டே இருக்கும்.

 

இது மாடி வீட்டு வருமானம் … தொடர் 3…. மாடி வீட்டில் புளிச்ச கீரை சாகுபடி..!

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.