Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஆதரவற்றோருக்கு உதவுவதே லட்சியம் திருச்சி ஷிவசக்தி சமூக சேவை அறக்கட்டளை

ஆதரவற்றோருக்கு உதவுவதே லட்சியம் திருச்சி ஷிவசக்தி சமூக சேவை அறக்கட்டளை

மனிதனிடம் இருக்கும் பல்வேறு ஆக்கப்பூர்வான எண்ணங்கள் சொல் வடிவம் பெறாமல் போவதற்கு அவர்களுக்கு அன்பும், ஆதரவும், அரவணைப்பும் கிடைக்காமல் போனதே காரணம். இந்த நிலை இருக்க கூடாது. தாயன்பிற்கு ஈடாக அன்பு காட்டி மனிதநேயத்தை வளர்த்து அதன்வழி ஆக்கப்பூர்வமான காரியங்களை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஷிவசக்தி சமூக சேவை அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகத்தலைவர் முருகேஷ் குமார் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது, எங்கள் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்குதல், சாலையோர ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோருக்கு உதவி செய்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல், கணவரால் கைவிடப்பட்டோர், விதவை பெண்களுக்கு சுயதொழில் தொடங்கி வருமானம் ஈட்ட உதவி செய்தல், ஆதரவற்றோர் இறந்தால் ஈமச்சடங்கிற்கு உதவுதல், நோயுற்ற ஏழை எளியோருக்கு மருத்துவ செலவிற்கு உதவுதல் போன்ற பல்வேறு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக செய்து வருகிறோம்.


திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சேதுராமன்பிள்ளை காலனி பஸ் நிலையம் எதிரில், சிவசக்தி அருள்வாக்கு ஜோதிட நிலையம் வைத்துள்ளோம். கொல்லிமலை மாசி பெரியண்ணன் ஆசியுடன் செய்வினை கோளாறு, கண் திருஷ்டி கோளாறு, குழந்தை பாக்கியம் கிடைக்க பரிகாரம், குடிபோதையை நிறுத்த மருந்து, திருமணம் தடை நீக்க, கடன் பிரச்சனை தீர, குலதெய்வம் வசியம், தொழில்வசியம், ஜனவசியம், போன்றவைகளை கடந்த 15 வருடங்களாக செய்து வருகிறோம்.

இதில், கிடைக்கப்பெற்ற வருவாயை கொண்டு மக்கள் நலன் பெற பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறோம். தொடர்ந்து நலத்திட்ட உதவுகளை செய்து வருவேன் என்றார். நலதிட்ட உதவிகளோ, அருள்வாக்கு பெற விரும்புவோர்களோ 93616 23557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என முருகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.