Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நீலகிரியில் வாகன சார்ஜிங் மையம்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நீலகிரியில் வாகன சார்ஜிங் மையம்

உலக நாடுகளில் கச்சா எண்ணெய் வளம் வேகமாகக் குறைந்துவரும் நிலையிலும், அதனால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தவும், மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மாற்றப்பட கெடு விதிக்கப்பட்டுள்ளது.

3

2020-ம் ஆண்டில் இந்தியாவில் 1,52,000 மின்சார இருசக்கர வாகனங்களும், 3,400 கார்களும், 600 பேருந்துகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மின்சார வாகனத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க, மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டுத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கான உள் கட்டுமான வசதிகளை உருவாக்க இந்தத் தொகை பயன்படுத்தப்படும்.

மின்சார வாகனங்களில் உள்ள முக்கியப் பிரச்சினை சார்ஜிங் மையங்கள் இல்லாததே. சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே சார்ஜிங் மையங்கள் போதுமான அளவு இல்லாததால், சிறிய நகரங்களில் வாகனங்களை சார்ஜ் செய்வது பெரும் சவாலாக உள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில முதன் முறையாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் ஒன்றை உதகை ஜெம் பார்க் ஓட்டலில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டுக்கு ரூ.19 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு காரை சார்ஜ் செய்ய சராசரியாக 20 முதல் 30 யூனிட் சார்ஜ் செய்ய வேண்டும். அதன் மூலம் 350-400 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.