Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஒரு மனிதன் ஏன் தோற்கிறான் ?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஒரு மனிதன் ஏன் தோற்கிறான் ?

ஆர்வமின்மை : ஒரு மனிதன் எவ்வளுவு தான் புத்தி கூர்மை உள்ளவவராக இருந்தாலும் அவர் செய்யும் செயலில் ஆர்வம் இல்லை என்றால் இயல்பாகவே அவரால் தனது முழு திறமையையும் உபயோகிக்க முடியாது . ஆர்வம் என்றால் சிலருக்கு சூழ்நிலை காரணமாகவோ அல்லது இயற்கையாகவோ இருக்கக்கூடும் .ஆர்வம் முழுமையாக இருக்கும் பொழுது மட்டுமே அவரால் முழு ஆற்றலையும் வெளிப்படுத்த முடியும் .

சுயக்கட்டுப்பாடு இல்லாமை: இது முக்கியமான காரணம் ஆகும்.சிறிய பிரச்சனை களுக்காக கூட தங்களை சுய கட்டுப்பாட்டை பயன் படுத்த முடியாதவர்கள் . அவர்களின் மனம் சொல்லும் படியெல்லாம் நடந்து கொண்டு நேரத்தை வீணடிப்பது .
நீடித்து இல்லாதிருத்தல் : சில நாட்களுக்கு மட்டும் உழைத்து விட்டு எனக்கு பலன் கிடைக்கவில்லை என்று முயற்சியை கைவிட்டு விடுதல். ஆனால் உண்மையில் வெற்றி சில தூரம் இருக்கும் வேலையில் முயற்சியை விட்டு விடுதல் .

தவறான அணுகுதல் : பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்று கற்றுக்கொள்ளாமல் தவறான முறையில் அதை அணுகி பின் தோல்வியை தழுவி விட்டோம் என்று வருந்துதல்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

சிந்தனைகளை செயலில் காட்டாமல் இருத்தல் : பல மனிதர்கள் ஆற்றல் மிக்க சிந்தனை உடையவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் அதை செயலில் செய்யாதவரை அந்த சிந்தனைகள் எவ்வளவு ஆற்றல் மிக்கவைகளாக இருந்தாலும் பலனை தராது .

உற்பத்தித்திறன் இல்லாமை: குறிப்பிட அளவு செயலை மட்டும் செய்து விட்டு வெற்றியை எதிர்பார்த்து இருத்தல் முழுமையான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியை பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் செயல் படுத்தல்

செயலை முழுவதுமாக நிறைவு செய்யாமை : ஒரு செயலை முழுவதுமாக முடிக்காமல் அதன் முடிவுகளின் மீது பயத்தைகொண்டிருத்தல் .

செயலை துவங்காமல் இருத்தல் : சில மனிதர்கள் செயலை துவங்காமல்அதனை தள்ளிப்போடுக்கொண்டு நேரத்தை வீணடித்தல் .

தோல்வி வந்து விடுமோ என்ற பயம் : தோற்று விடுவோமோ என்று அஞ்சியே திறமையை முழுமையாக பயன்படுத்தாமல் இருத்தல் .
மற்றவர்களின் கட்டளைக்காக காத்திருத்தல்: சில மனிதர் கள் சில இக்கட்டான சூழ்நிலையில் மட்டுமே செயலை மேற்கொள்வார்கள் சிறிய செயலாக இருந்தாலும் மற்றவர்களின் கட்டளைக்காக காத்திருப்பவர்கள் .

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

மற்றவர்களின் மீது பழி சுமத்துதல்: சிலர் தங்களின் குற்றத்தை மறைக்க சந்தர்பத்தின் மீதோ அல்லது சூழ்நிலையின் மீதும் பழி சொல்லிக்கொண்டு திரிதல் .

தாழ்வு மனப்பான்மை : தங்கள் செய்த குற்றத்தை எண்ணி எண்ணி அதிலிருந்து மீளாமல் தங்களை மேலும் தாழ்வாக எண்ணிக்கொண்டு இருத்தல் .

அதிகமாக பிறரை சார்ந்து இருத்தல் : சிலர் தங்களின் எந்த தேவையாக இருந்தாலும் பிறர் தனக்காக அதை செய்வார்கள் என காத்துக்கொண்டு இருத்தல் .

சுய பிரச்சனைகளில் மூழ்கி இருத்தல் : சில மனிதர்கள் சில சோகமான பழைய நினைவுகளில் மூழ்கி இருந்து எதிர்காலத்தை பற்றி கவ லை கொள்ளாமல் இருத்தல் .
போதிய கவனம் இல்லா திருத்தல் : சில மனிதர்கள் தங்களின் லட்சியத்தின் மீது போதிய கவனம் செலுத்தாமல் இருத்தல் . அதிகமான புத்தி கூர்மை உள்ள மனிதர்களும் கூட போதிய கவனம் செலுத்தாமல் இருத்தல் என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரே சமயத்தில் பல விஷயங் களில் கவனம் செலுத்துதல் : ஒரே ஒரு செயலில் முழு கவனம் செலுத்துவதற்கு பதிலாக பல விஷயங்களில் கவனத்தை செலுத்தி இறுதியில் ஒன்றை கூட முடிக்காமல் இருத்தல் .

பொறுமை இல்லாமல் இருத்தல் : சில மனிதர்கள் தற்காலிக சந்தோஷத்திற்காக பொறுமையை இழந்து நிலை யான மகிழ்ச்சியை இழத்தல் .

தெளிவான முன்னோக்கு பார்வை இல்லாமை : ஒரு மரம் தன கண்ணிற்கு முன் இருக்கின்றது என்ற காரணத் திற்காக காடு தெரியவில்லை என்ற உதாரணம் இவர்களுக்கு பொருந்தும் .முதல் படியை பிடித்தல் போதும் மீதம் உள்ள படிகள் தானாகவே புலப்படும் என்பதை அறியாமல் இருத்தல்

சிந்தனையில் தெளிவு இல்லாமை : ஆராயக்கூடிய அறிவை மட்டும் பயன்படுத்து தலும் அல்லது கற்பனை அறிவை மட்டும் பயன் படுத்துதலும் இதற்கு உதாரணம் ஆகும் . இந்த இரண்டு அறிவும் சரியான விகிதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் .

சுய நம்பிக்கை இல்லாமை : இது தோல்விக்கு மிகமுக்கியமான காரணம் ஆகும் ஏனெனில் நம்பிக்கை என்ற அடிப்படை இல்லாத எந்த ஒரு செயலும் வெற்றி அடையும் வாய்ப்பு குறைவு எனவே நம்பிக்கையை வளர்க்கும் பயிற்சியில் ஈடுபடுவது மிகவும் முக்கியமாக உள்ளது .

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.