வங்கிகள் அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தில் (இசிஎல்ஜிஎஸ்) கீழ் மேலும் ரூ.45,000 கோடி கடன் வழங்க தயாராக உள்ளதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுனில் மேத்தா கூறியது,
மத்திய அரசு தொழில் நிறுவனங்களுக்கு உதவ பல சலுகைகளை அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கும் சலுகைக் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இசிஎல்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை ரூ.2.54 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2.40 கோடி மதிப்பிலான கடன் ஏற்கனவே பயனாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர்கள் மேலும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தின் காலம் செப்டம்பர் 30ம் தேதி வரை (3 மாதங்கள்) நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகள் மேற்கொண்டு ரூ.45,000 கோடி மதிப்பிலான கடன் வழங்க வழி ஏற்பட்டுள்ளது என்றார்.