ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது..!
எஸ்.பி.ஐ வங்கி புதிய உதவி மைய சேவை எண்களை வெளியிட்டுள்ளது. தங்களின் குறைகளை தீர்க்க வாடிக்கையாளர்கள் இனி 1800 1234 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ள முடியும். எஸ்.பி.ஐ. வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து அறிந்து கொள்ள இந்த எண்ணை வாடிக்கையாளர்கள் இனி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எஸ்.பி.ஐ. தன்னுடைய ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
மேலும் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் ஓ.டி.பி. அடிப்படையில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்களில் இருந்து மட்டுமே பணத்தை எடுக்க இயலுமே தவிர மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை எடுக்கும் போது ஓ.டி.பி. அடிப்படையில் பணம் எடுக்கும் முறை செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.