Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீட்டில் இருந்து மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்! 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வீட்டில் இருந்து மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம்! 

வெறும் நூறு ரூபாயில் மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்க முடியுமா? அதுவும் வீட்டில் இருந்து காளான் வளர்ப்பு மூலம். வீட்டிலிருந்தே குறைந்த முதலீட்டில் நீங்கள் எதிர் பார்த்திடாத அளவில் லாபம் பெற முடியும்.நீங்கள் செய்யும் மற்ற தொழிலில் வரும் லாபத்தை விட இந்த காளான் அறுவடை செய்து விற்பனை செய்தல் லாபம் கிடைக்கும் .   சிரமம் இல்லை செலவும் இல்லை ,சுலபமாக லாபம் பெறலாம்

காரணம்:  ஒரு பேக் காளான் பையில் சுமார் 700 கிராம் அளவிற்கு நாமல் உற்பத்தி செய்யமுடியும். அப்போது  5 பேக் காளான் பையில் சுமார் 3500கிராம் அதாவது 3 கிலோ விற்கு மேல் கிடைக்கும். ஒரு கிலோ காளான் 150 Rs லிருந்து 170 Rs வரை விற்பனை செய்யலாம். எண்ணில் அடங்காத லாபம் பெறமுடியும்.

காளான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள்: பாலிதீன் பை, வைக்கோல், தண்ணீர்

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

3

காளான் வளர்க்கும் முறை:  காலனை வளர்ப்பதுக்கு முதலில் 16 அல்லது 18 சதுர அடி குடிசை அறை (அல்லது) குளிர்ந்த நிழலான ஒரு அறை இருக்க வேண்டும். வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு வைகொலை தூய்மையான தண்ணீரில் முதலில் நன்றாக சுத்தம் செய்த பிறகு வைக்கோலை எடுத்து கொதிநீரில் முக்கி வைக்கோலை சுத்தம் செய்ய வேண்டும் (அல்லது) இரசாயனம் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம். 12-24 என்ற அளவுள்ள பாலிதீன் பை எடுத்துகொள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியது: பாலிதின் பை தூய்மையாக இருக்க வேண்டும் . பிறகு பாலித்தின் பையில் வைக்கோலை  முதலில் நன்கு இறுக்கமாக பந்து போல் எடுத்து 05 செ.மீ. அளவு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் ஓரத்தில் தூவ வேண்டும். (குறிப்பு : காளான் விதைகளை உற்பத்தியாளர்களிடம் அல்லது அங்காடி கடைகளில் கிடைக்கும்.

இதுப்போல் மாறி மாறி 07 முதல் 08 அடுக்கு போட வேண்டும். பிறகு அந்த காளான் விதை நிறப்பட்ட பையை இருக்கமாக சணல் (அஅல்லத) ரப்பர் பேண்ட் போட்டு கட்டிவிட வேண்டும். பக்கவாட்டில் 03 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். பின்பு குடிலின் மையத்தில் தயார் செய்து வைத்த பாலித்தின் பைகளை கட்டித் தொங்க விட்டு தினமும் தண்ணீரை பாலித்தின் கவரை சுற்றி தெளிக்க வேண்டும்.

இவ்வாறு தெளித்து வந்தால் 10வது நாளில் காளான் விதைகள் வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிட்டு நாம் எதிர் பார்த்த காளான் விற்பனைக்கு தயாராகி விடும். இவ்வளவு எளிமையான குறைந்த முதலீட்டில் லாபம் தரக்கூடிய சிறந்த சுயதொழில் காளான் உற்பத்தி தான்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.