திருச்சியின் திருவிழா – துபாய் சிட்டி பொருட்காட்சி
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் கடந்த 8ம்தேதி அமைச்சர் கே.என்.நேரு துபாய் சிட்டி பொருட்காட்சி தொடங்கி வைத்தார். வழக்கமான பொருட்காட்சியில் உள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்ற இங்கு கூடுதலாக குழந்தைகளுக்கென பிரத்யேகமாக படகு சவாரி, ஜம்பிங்பேட், ரயில் சவாரி எனவும் டிராகன்ரயில், டான்சிங் ஜெயன்ட்வீல், பிரேக்டான்ஸ், கொலம்பஸ் கப்பல், டிஸ்கோடான்ஸ் ராட்டினம் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் கூடுதலாக மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு குறித்து அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டால்கள் பொதுமக்களுக்கு கூடுதல் பலனைதருகிறது.இங்குள்ள ஃபேன்சி பொருட்கள் விற்பனை கூடங்களில் ஏராளமான புதுவகை டிஸைன்கள் விற்பனைக்கு உள்ளது.
மேலும் இந்த பொருட்காட்சி குறித்து ஒருங்கிணைப் பாளர்கள் சீனிவாசன் மற்றும் சுதாகரன் கூறும்போது இங்கு விற்பனை செய்யும் உணவு பொருட்கள் தரம்குறித்து தீவிர கண்காணிப்பு செய்கிறோம்.
இங்கு வரும் பொதுமக்கள் முழுமனநிறைவுடன் ,மனமகிழ்ச்சியுடன் திரும்ப போதுமான அனைத்து வசதிகளும் செய்துள்ளோம். மேலும் கூடுதலாக புதிதாக இணைக்கப்படும் SNOW WORLD எனப்படும் பனிஉலகம் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.