வியாபாரிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான
தேசிய ஓய்வூதியத் திட்டம்…
இந்தத் திட்டத்தில் வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஆண்டு விற்று முதல் ரூ.1.5 கோடிக்குள் இருக்க வேண்டும்.
அரிசி ஆலை உரிமையாளர்கள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், கமிஷன் ஏஜென்டுகள், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள், சிறிய ஹோட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். இவர்களுக்கும் 60 வயதில் மாதம் ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்.
வயதுக்கேற்ப பங்களிப்புத் தொகை இருக்கும். இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு வியாபாரி ஓய்வூதியக் கணக்கு எண் (Vyapari Pension Account Number -VPAN) தரப்படும்.
பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டப் பயனாளிகள் எவ்வளவு தொகை கட்டுகிறார்களோ, அதே அளவு தொகையை இவர்களும் கட்டுவார்கள்.
இதே போல், 60 வயதுக்குள் வெளியேறும்போது அதே நிபந்தனைகள் இவர்களுக்கும் பொருந்தும்.இந்த மூன்று திட்டங்களிலும் நாமினி நியமிக்கும் வசதி இருக்கிறது.
இந்தத் திட்டங்களில் புதிதாக சேர்பவர்களுக்கு அடல் பென்ஷன் திட்டத்தில் அரசின் பங்களிப்பு கிடையாது என்பதால், ரூ.15,000-க்குக் கீழ் மாதச் சம்பளம் வாங்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டத்தைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். இந்தத் திட்டங்களில் கிடைக்கும் பென்ஷன் தொகை குறைவாக இருக்கும்.
எனவே, இடையிடையே கிடைக்கும் பணத்தை எஃப்.டி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, தொகுப்பு நிதியை உருவாக்கி, ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்கலாம்!