Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மோசடி பத்திரப்பதிவு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மோசடி பத்திரப்பதிவு

தமிழக அரசு, போலி பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

3

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மோசடி பதிவால் பாதிக்கப்பட்ட நடிகை வாணிஸ்ரீயின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சட்டத்தின்படி மாவட்ட பதிவாளர்கள் 10 விதமான பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து தெளிவான விளக்கத்தையும், அரசாணையையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* மாநில அரசு அல்லது சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான சொத்துக்கள்.
* அறநிலையத்துறை மற்றும் மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள்.
* பூமிதான சொத்துக்கள்
* வக்பு வாரிய சொத்துக்கள்
* கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதிக்கு பின்பு பதிவு செய்யப்பட்ட அனுமதியற்ற மனைகள்,
* பதிவு செய்த ஆவணங்களை தன்னிச்சையாக ரத்து செய்த சொத்துக்கள்.
* ஆள்மாற்றம் செய்து பதியப்பட்ட சொத்துக்கள், இறப்பு-வாரிசு சான்றிதழ்கள், பட்டா-வீட்டு வரி ரசீது உள்பட போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் அதனை பின் தொடர்ந்து செய்யப்பட்ட அனைத்து பதிவுகள்.
* மத்திய, -மாநில அரசுகளின் விதிகளை மீறி பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள்.
* கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள்.
* அரசு கையகப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள்.
மேற்கூறப்பட்ட இந்த பத்திரப்பதிவுகளை இனி மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்ய முடியும். இனி கோர்ட்டுக்கு செல்ல வேண்டியதில்லை.
எனவே பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனு செய்ய வேண்டும். அவர் 90 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார். போலி பத்திரப்பதிவும் ரத்து செய்யப்படும். இதன் மூலம் சொத்தின் உண்மையான உரிமைதாரர்களுக்கு சொத்து சென்றடையும். இந்தியாவிலே இது போன்ற ஒரு சட்டம் தமிழகத்தில் தான் முதன்மையாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.