Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு  டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பஞ்சாயத்து அங்கீகார மனைகளுக்கு  டிடிசிபி அங்கீகாரம் பெறுவது எப்படி?

முதலில் டிடிசிபி அலுவலகம் சென்று உங்களது மனைகளுக்கு வரன்முறைப்படுத்துதல் அங்கீகாரம் கிடைக்குமா? அல்லது மேற்படி மனைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட பகுதிகளில் வருகிறதா (மலை, நீர்நிலை போன்று) அதனால் மனு செய்தால் கிடைக்குமா, கிடைக்காதா என்பது போன்ற நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு tnlayouts.com என்கிற இணையதள லிங்கில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி லிங்கில் 4 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அவை,

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

1. தனி மனைக்கான டிடிசிபி உள்நுழைவு
2. முழு மனைப்பிரிவிற்கான டிடிசிபி அங்கீகார நுழைவு
3. தனி மனைக்கான சிஎம்டிஏ உள்நுழைவு
4. முழு மனைப் பிரிவிற்கான சிஎம்டிஏ உள்நுழைவு

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இவற்றில் தங்களுக்கு தேவையான லிங்கில் சென்று விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும். மேற்படி விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மனைக்கு ரூ.500 ஆகும்.
பொறியாளரை வைத்து தங்கள் மனையை மட்டும் மனைப் பிரிவில் இருந்து தனித்துக் காட்டி வரைபடம், அம்மோனியா பிரிண்டில் தயார் செய்ய வேண்டும். மேற்படி வரைபடம் அரசின் சர்வே எண் புலப் படத்தோடு மிகச் சரியாக பொருந்த வேண்டும். இந்த வரைபடத்தை A3 அளவில் 3 புளு பிரின்ட் எடுக்க வேண்டும்.
மேற்கண்ட வரைபடம் மற்றும் நம் ஆவணம், மூல ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா, புலப்படம் ஆகியவற்றில் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பம் பெற வேண்டும். மேற்படி மனைகளுக்கு தங்கள் பெயரில் பட்டா கட்டாயம் மாறி இருக்க வேண்டும்.

குறைந்தது, கூட்டுப் பட்டாவில் ஆவது தங்கள் பெயர் இருக்க வேண்டும்.
மனை, நஞ்சையில் இருந்து இது வரை பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தால், கிராம நிர்வாக அலுவலர் (VAO) வரன்முறை அங்கீகாரம் வாங்கி வந்தால் பட்டா தருகிறேன் என்பார். பட்டா இல்லாமல் அங்கீகாரம் கொடுத்தால் சட்ட குழப்பங்கள் வரும். இது சென்னையை சுற்றி உள்ள பகுதிகளின் கள நிலவரம். இதற்கு அரசு தெளிவான வழிகாட்டுதலை கொடுக்க வேண்டும்.

மேற்படி ஆவணங்கள் அனைத்தும் வைத்து டிடிசிபி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். .அவர்கள் அதனை சரி பார்த்து முத்திரையிட்டு உள்ளாட்சித் துறைக்கு அதாவது ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/பேரூராட்சிக்கு அனுப்பி வைப்பார்கள்.
பிறகு உள்ளாட்சித் துறை அலுவலகத்தில், நம் விண்ணப்பத்தின் அடிப்படையில் மனைக்கான வரன்முறைக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பிறகு அங்கிருந்து மீண்டும் டிடிசிபி அலுவலகத்திற்கு நம் விண்ணப்பம் செய்ய வேண்டும். அங்கு நம்முடைய வரைபடத்தில் டிடிசிபி முத்திரையிட்டு அங்கீகார எண்ணும் வழங்குவார்கள்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.