வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கிறோம் என்றால் நமக்கு கிடைப்பது 500 ரூபாய் நோட்டுகள் தான். இந்த காரணத்தினால் தேவைக்கு அதிகமகாக பணத்தை எடுத்து மீதம் இருக்கும் பணத்தை வீண் செலவழிக்கும் சூழ்நிலை உருவாகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியானது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த சூழ்நிலையைக் குறைக்கவும், மக்களிடையே ரூ.100 , ரூ. 200 பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது அறிக்கையில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் ரூ.100 , ரூ. 200 பண நோட்டுகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறது. இந்த வசதியை வரும் செப்டம்பர் மாதம் 31-தேதிக்குள் 75 சதவிகித ஏ.டி.எம்.களிலும் 2026 –ம் ஆண்டு மார்ச் 31- தேதிக்குள் 90 சதவிகித ஏ.டி.எம்.களிலும் ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.