வட்டியில்லா இஎம்ஐ ஏமாற்றா?
“வட்டியில்லா மாதத் தவணை (No cost EMI) என்று சொல்லப்பட்டாலும் கடன் பரிசீலனைக் கட்டணமாக உங்களிடமிருந்து ஒரு தொகையை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வசூலித்து விடுவார்கள். மேலும், அந்த வீட்டு உபயோகப் பொருள்களை ரொக்கமாகக் கொடுத்து வாங்கும்போது தள்ளுபடியாக ஒரு தொகை உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், வட்டியில்லா மாதத் தவணைக் கடன் திட்டத்தின் மூலம் பொருள்கள் வாங்கும்போது அந்தத் தள்ளுபடி தொகையைக் கடன் கொடுக்கும் வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவிடும். மேலும், வட்டித் தொகைக்கு ஈடு கட்டுமாறு பொருள்களின் விலையைச் சற்று ஏற்றியும் சில நிறுவனங்கள் விற்கின்றன.
ஆகவே, வட்டியில்லா மாதத் தவணை என்று சொல்லப்பட்டாலும், கடன் பரிசீலனைக் கட்டணம் மற்றும் தள்ளுபடி தொகை என்று மறைமுகமாக அந்தத் வட்டித் தொகை உங்களிட மிருந்து வசூலிக்கப்படுகிறது என்பதே நிதர்சனம். எனவே, வட்டியில்லாத மாதத் தவணை என்றால், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.