Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அடிக்கடி நடக்கும் ஐடி ரெய்டு வீட்டில் தங்கம், பணம் வைத்துக்கொள்ளும் அளவு…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அடிக்கடி நடக்கும் ஐடி ரெய்டு வீட்டில் தங்கம், பணம் வைத்துக்கொள்ளும் அளவு…

இந்தியாவில் இப்போது எங்கு திரும்பினாலும் ரெய்டு மயமாக உள்ளது. இப்படி எங்கு பார்த்தாலும் ரெய்டு நடந்து வருவது தொடர்பாக சாமானியர்கள் மனதில் எழும் கேள்வி ஒன்றே, வருமானத்துறைக்கு அஞ்சாமல் எவ்வளவு பணம் மற்றும் நகைகளை வீடுகளில் வைத்திருக்கலாம் என்பது தான்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

வீட்டில் வைத்திருக்ககூடிய தங்கத்தின் வரம்பு ?
வருமான வரித்துறை, ஒரு குடும்பத்தில் திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், ஆண்கள் என அனைவரும் எவ்வளவு நகைகளை வீட்டில் வைத்திருக்கலாம் என குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி, திருமணமான பெண்கள் அரை கிலோ வரையிலான தங்க நகைகளை வீட்டில் வைத்துக்கொள்ளலாம். அதே சமயம் திருமணமாகாத பெண்கள் 250 கிராமும், ஆண்கள் 100 கிராமும் தங்கத்தை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்பானது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவேளை வருமான வரித்துறை அனுமதித்த வரம்புக்கு மேல் வீட்டில் தங்கம் அல்லது தங்க நகைகள் இருந்தால் அவை வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படலாம். மேலும், குடும்ப பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரியம் போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு அதிக அளவில் உள்ள தங்கத்தை பறிமுதல் செய்யாமல் விட்டுவிடுவது மதிப்பீடு செய்யும் அதிகாரியின் விருப்பத்திற்கு உட்பட்டது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

தனித்தனியாக லாக்கர் வசதி
இந்தியாவைப் பொறுத்தவரை குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே லாக்கரில் நகையை சேமித்து வைப்பது வழக்கமாக உள்ளது. இதனை வருமான வரித்துறையினர் தவறாக புரிந்து கொண்டு பறிமுதல் செய்யலாம் என்பதால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் தங்களுடைய வரம்புக்குட்பட்ட நகைகளை தனியாக அவர்களது பெயர்களைக் கொண்ட லாக்கர்களில் சேமிப்பது குழப்பத்தை தவிர்க்க உதவும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.