நிதி நிலைமை உறுதியாக இல்லாத பல்வேறு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வங்கிகளின் உரிமைகளை ரத்து செய்யும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட வங்கி ஒன்றின் சேவைகளை ரத்து செய்துள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
போதுமான மூலதனத்தை கொண்டு வரவில்லை மற்றும் பணப்புழக்கம் இல்லாதவை என்பவற்றை காரணம் காட்டி, கடந்த திங்களன்று ரிசர்வ் வங்கி லக்னோவை சேர்ந்த HCBL கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்திருக்கிறார்கள்.
இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை முழுமையாக அவர்களுக்கு கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி உறுதி அளித்திருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்காக சுமார் 22 கோடி ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. ரிசர்வ் வங்கி அளித்த தகவலின் படி, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 கீழ் பல ஒழுங்குமுறை தேவைகளை இந்த HCBL வங்கி முறையாக செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
இதன் காரணமாக வங்கியில் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலைகளை சரி செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது மேலும் நிதி நிலைமை உறுதியாக இல்லாத பல்வேறு கூட்டுறவு மற்றும் நகர்ப்புற வங்கிகளின் உரிமைகளை ரத்து செய்யும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செயல்பட்ட அர்பன் கூட்டுறவு வங்கி, அகமதாபாத்தில் உள்ள மெர்சண்டைஸ் கூட்டுறவு வங்கி, அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா அர்பன் கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகளின் உரிமங்கள் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.