உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜஸ்ட் டயல். இந்நிறுவனத்தின் ரூ.3,497 கோடி மதிப்பிலான பங்குகளை ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரிலையன்ஸ்-ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே உறுதியாகியுள்ளது.
முதல் கட்டமாக ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 40.95 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 சதவீத பங்குகளை கையகப்படுத்த உள்ளதாகவும் ரிலையன்ஸின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில் பங்கு கைப்பற்றுதலுக்கு பிறகும் வி.எஸ்.எஸ் மணி, ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.