Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் ரூ.10,000 அபராதம்..!

வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்க, பணிகளை எளிமையாக்க, நாடு முழுவதும் கடந்த ஜுன் இறுதி நிலவரப்படி 2,13,766 ஏ.டி.எம் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பணத்திற்காக வங்கிகளில் வரிசையில் நிற்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

வாடிக்கையாளர்களின் சிரமத்தை குறைக்க திறக்கப்பட்ட இந்த ஏடிஎம் மையங்களில் பல நேரங்களில் பணம் இருப்பதில்லை. இதனால் கணக்கில்லா வேறு ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் அதற்கு அந்த வங்கி கட்டணம் வசூலிக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்களே. இந்நிலையை தவிர்க்கும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் எப்போதும் பணம் இருக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒரு மாதத்தில் 10 மணி நேரத்துக்கு மேல் ஏ.டி.எம்.மில் பணம் இல்லாமல் இருந்தால் அந்த வங்கிக்கு மையம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த நடவடிக்கை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.