தைய்ய… தைய்யா… தைய்ய.. தம்பி இல்லாம அண்ணன் இல்ல…
தற்போது ஒரு பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்காக வியாபாரிகள் பல்வேறு வகையில் விளம்பரங்கள் செய்து வருகின்றனர். தள்ளுபடி சலுகை, திறப்பு விழா சலுகை, ஆடி தள்ளுபடி, தீபாவளி என எல்லா பண்டிக்கைகளுக்கும் திரும்பும் திசையெல்லாம் விளம்பரங்கள் தான்,
நிறுவனங்கள் தங்களது விளம்பரங்கள் மூலம் தான் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கவர முடியும்.
ஆகையால் சிறிய பெரிய நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் விளம்பரங்களுக்கு என தனி பட்ஜெட் ஒதுக்கின்றனர். வளர்ந்த பெரும் நிறுவனங்களும் விளம்பரங்களில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
ஆனால், திருச்சியில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் ஒன்றில் விளம்பரங்களில் இன்றி வியாபாரம் அள்ளுகிறதாம். அண்ணன் தம்பி இருவரும் சிறு வித்தியாசத்துடன் ஒரே பெயரில் கடையை நடத்தி வருகின்றனர். இதனால் தம்பி விளம்பரம் செய்வதிலே அண்ணன் கடையில் கூட்டம் அலைமோதுகிறதாம்.