Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பார்சல் சேவையில் சாதனை புரிந்த திருச்சி மண்டல அஞ்சல்துறை

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பார்சல் சேவையில் சாதனை புரிந்த திருச்சி மண்டல அஞ்சல்துறை

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு மத்திய மண்டல அஞ்சல் துறை இயங்கி வருகிறது. இதில் 11 அஞ்சல் கோட்டங்களும், ஒரு ஆர்எம்மஸ் கோட்டமும் செயலாற்றி வருகிறது. இந்த மண்டலத்தில் 652 துணை அஞ்சலகங்கள் மற்றும் 2 ஆயிரத்து 835 கிராமிய கிளை அஞ்சலகங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் உள்ள 4 அஞ்சல் மண்டலங்களில் அதிக அஞ்சல் அலுவலகங்கள் மத்திய மண்டலத்தில் உள்ளன.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

கடந்த 2020ம் நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரையிலுமான காலகட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு விரைவு தபால் மூலம் ரூ. 5 கோடி வெளிநாட்டு தபால் சேவை மூலம் ரூபாய் 2.6 கோடி, பார்சல் சேவை மூலம் ரூ. 1.75 கோடி என்று ரூ.9 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.  கொரோனா ஊரடங்கு காலத்தின் போது மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் சேவை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள 4 அஞ்சல் மண்டலங்களில் லட்சம் கணக்குகள் கொண்ட முதல் மண்டலமாக மத்திய மண்டலம் விளங்குகிறது.

இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் வரை 5 லட்சத்து 55 ஆயிரம் புதிய கணக்கு தொடங்கப்பட்டது. 5.5 லட்சம் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல வீட்டிலிருந்தபடியே தபால்காரர் மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் ஏஇபிஎஸ் சேவை மூலம் ரூ. 120 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளது.  இந்திய அஞ்சல் துறை வழங்கி வரும் காப்பீட்டு சேவை மூலம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய பாலிசிகள் மூலம் ரூ. 220 கோடி பிரீமியம் வசூல் செய்யப்பட்டது. 5 லட்சம் இந்திய போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. அஞ்சல் அலுவலகத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய ஆதார் பதிவுகள் மற்றும் 84 ஆயிரம் ஆதார் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையவங்கி தேவை மொபைல் வங்கி சேவை, தபால்காரர் மூலம் ஐபிபிபி வங்கி சேவை, இணையம் மூலம் காப்பீடு பிரீமியம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அஞ்சல் துறை வழங்கி வருகிறது. இந்த சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.