11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் செய்முறைத்தேர்வு 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதற்கான மதிப்பெண்கள் 50-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டு, அந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படும். அதனால் மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.