அவசரகால தேவை என கூறி நில ஆர்ஜிதம் செய்யக்கூடாது
தஞ்சாவூரில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. விமான பயிற்சி மையத்திற்கு நிலம் வழங்கியவர்கள் தங்களது மாற்றிடம் வேண்டுமென கூறினர். இதன்பேரில், விமான நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள பகுதியில் நிலத்தை ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக கலெக்டர் தரப்பில் அவசர கால தேவைக்காக நிலம் ஆர்ஜிதம் செய்வதாக உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவசர காலத் தேவை என ஆர்ஜிதம் செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அரசுத் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவசர காலத் தேவை என்ற பிரிவை பயன்படுத்தி முறைப்படி குடியிருப்போரின் நிலத்தை ஆர்ஜிதம் செய்யக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, அரசுத் தரப்பு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.