ஜி.எம்.ஆர்.கே.மஹால் திறப்பு விழா – திருச்சி எம்பி. திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்
திருச்சி கே.கே.நகர் ரிங் ரோடு அருகில் சக்தி நகரில் ஜி.எம்.ஆர்.கே. மஹால் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பூர் தொழிலதிபர் சு.வி.குணாளன் மகாலட்சுமி, அறந்தாங்கி எம்எல்ஏ சி.டி. ராமச்சந்திரன், திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், சிறுபான்மை பிரிவு பேட்டரி ராஜ்குமார், கவுன்சிலர் விமலா ராணி பேட்டரி ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த திறப்பு விழா ஏற்பாடுகளை ஜி.எம்.ஆர்.கே. மஹால் மேலாண்மை இயக்குனர் ஆர்.எல். குமாரராஜா-ரேகா ஆகியோர் செய்தனர். இந்த ஜி.எம்.ஆர்.கே.மகாலில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் பிறந்தநாள் நிகழ்ச்சி திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுபகாரியங்களுக்கும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்கு பிரத்தியேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிடுவதற்கும் பரிமாறுவதற்கும் சிறப்பான முறையில் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அதிகமான ஆதரவை வழங்க வேண்டுமென ஜி.எம்.ஆர்.கே. மஹால் சார்பில் கேட்டுக் கொள்ளபடுகிறது.