Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அதிகரிக்கும் செலவுகள்.. ஓய்வு வயதுக்கு பின் பணி வாய்ப்பை திட்டமிடுவது எப்படி?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அதிகரிக்கும் செலவுகள்.. ஓய்வு வயதுக்கு பின் பணி வாய்ப்பை திட்டமிடுவது எப்படி?

ஓய்வுக்கு பிந்தைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய நிதி இல்லாததே ஒருவர் ஓய்வைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணம்.

ஒரு கணக்கெடுப்பில் சுமார் 80% பேர் ஓய்வுக்கு பிறகான உறுதியான திட்டமிடல் எதுவும் தெரியவில்லை என்றும், அதே சமயம் 62% பேர் 30 வயதிற்குப் பிறகு ஓய்வுக் காலத்திற்கு பிறகான வாழ்க்கைக்குத் தீவிர சேமிப்பில் ஈடுபடத் துவங்குவதாகத் தெரியவந்துள்ளது. குழந்தைகளின் நிதி இலக்குகள் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக ஒருவர் அதிக நிதி செலவிடுவதால் ஓய்வுக் காலத்திற்காகச் சேமிக்கும் உங்கள் திறனைப் பாதிக்கிறது.

சீனியர் சிட்டிசன்களால் பெரிதும் விரும்பப்படும் சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தவிர ஓய்வுக்கு பிறகான அதிக வாழ்க்கை செலவுகள் உங்கள் ஓய்வு நிதியில் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நாளுக்குநாள் மருத்துவ தேவைகளின் விலை உயர்வ தால், ஓய்வுக் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள போது மான காப்பீடு வைத்திருக்க வேண்டும். திருமணங்கள் தள்ளிப்போவதால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் தள்ளிப் போகின்றன. எனவே பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் தங்கள் கடமைகளை முடிக்கும் வரை தங்கள் ஓய்வுக் காலத்தைத் தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தாமதமாக ஓய்வு பெறுவதால் முக்கியமாக நிதி ஆதாயங்கள் கிடைக்கும் என்றாலும் இதோடு சேர்த்துப் பிற நன்மைகளும் உள்ளன.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

60 வயதில் ஓய்வு பெறும் ஒருவர் திறமை மற்றும் சம்பளத்தின் அடிப்படை யில் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பார். எனவே கூடுதலாக 2 வருடங்கள் வேலை பார்க்கும் போது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50–&70% கிடைத்தாலும், ஓய்வு நிதியானது மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கப்படும் மற்றும் செலவுகளில் பணவீக்க தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்.

சீனியர் சிட்டிசன்களுக்கு நேரடியாக சில இன்ஷுரன்ஸ் கவர் ஆகாது என்பதால் ஒருவர் தனது ஓய்வுக் காலத்தை நீட்டிப்பதன் மூலம், அவருக்கும் அவரது துணைக்கும் பெருநிறுவன உடல்நலக் காப்பீட்டைப் பெறலாம். தவிர LTF, EPF போன்ற பிற சலுகைகளைப் பெறலாம். ஓய்வு பெற்ற பிறகும் சில வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால், ஒருவர் தனது பிள்ளைகளைப் பொருளாதார ரீதியாகச் சார்ந்திருக்கத் தேவையில்லை.

வேலை செய்யாதவர்களுடன் ஒப்பிடுகையில் 65 வயதுக்கு மேல் பணிபுரிபவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு அதிகம். போதுமான அளவு ஓய்வு நிதியை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, ஈட்டும் வருமா னம் மூலம் ஒருவர் தான் சாதிக்க நினைக்கும் விஷயங்கள் அல்லது கனவுகளை நோக்கி நகரலாம்.

ஓய்வுக்கு பிறகும் பணி யைத் தொடர விரும்பும் நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பே அதற்கு மனதளவில் தயாராகித் திட்டமிடத் தொடங்கு வது முக்கியம். வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் வருமானத்திற்காகத் தொடர்ந்து உழைக்க விரும்பும் ஒருவர் ஏற்கனவே உள்ள பணியிடத்தில் உங்கள் ஓய்வுக் காலத்தை நீட்டிக்க முடியுமா அல்லது புதிய வேலையைத் தேட வேண்டுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதே போல முழு நேர வேலை வேண்டுமா அல்லது பகுதி நேர வேலை வேண்டுமா, வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமா என்பதைத் தெளிவாகத் திட்டமிடுவது முக்கியம்.

Coursera, Udemy, Udacity போன்ற இலவச கோர்ஸ்கள் மூலம் ஒருவர் தங்கள் திறன்களை மேம்படுத்தலாம். வேலைகளைத் தாண்டி ஒருவர் நெட்வொர்க்கை அதிகரிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்குச் சிறப்பாக வேலைகளை வழங்கும் லிவீஸீளீமீபீமிஸீ மற்றும் ழிணீuளீக்ஷீவீ.நீஷீனீ போன்ற தொழில்முறை தளங்களிலும் ஒருவர் வேலை வாய்ப்புகளைத் தேடலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.