மாதம் ரூ.1,000 மட்டுமே..! கிடைப்பதோ 5,00,000!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் ஒன்று செல்வ மகள் சேமிப்புத் திட்டம். பெண் குழந்தைகளுக்கான இந்த சிறு சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.6 சதவீதம் ஆகும்.
மாதம் ரூ.100ல் தொடங்கும் இத்திட்டத்தில் மாதம் ரூ.5,000 வரை செலுத்தலாம். மாதம் ரூ.1,000 செலுத்தினால் 15 வருட முடிவில் கட்டிய தொகை ரூ.1,80,000த்துடன் வட்டி ரூ.3,30,373 சேர்த்து 21 வருடத்திற்குப் பிறகு முதிர்வு தொகையாக கிடைப்பது ரூ.5,10,373.
இத்திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு 10 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்ட காலமான 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு அதன் 18 வயதில் கல்வித் உதவித் தொகையாக 50 சதவீதம் பெறலாம். குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஆதார் நகல் மற்றும் 2 புகைப்படத்தினை ஆவணமாக வழங்க வேண்டும்.
மற்றொரு திட்டம் பொன்மகன் சேமிப்புத் திட்டம். மாதம் ரூ.500ல் தொடங்கி மாதம் ரூ.5,000 வரை செலுத்தும் இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும். 15 வருட முடிவில் செலுத்தும் தொகை ரூ.1,80,000த்துடன் வட்டி ரூ.1,35,572 சேர்த்து முதிர்வு தொகையாக கிடைப்பது ரூ.3,15,572.
10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் காப்பாளர் மூலம் கணக்கு தொடங்கலாம். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டும் என கட்டாயம் இல்லை. அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். செலுத்தும் தொகைக்கு 80சின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோர் ஆதார் நகல், பான் அட்டை, 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவினை ஆவணமாக வழங்க வேண்டும்.