அருண்மொழியின் ஓயாதஅலைகள் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் !
அருண்மொழியின் ஓயாதஅலைகள் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் !
புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள் புரத்தில் மூன்று வீடுகள் சமீபத்தில் தீக்கிரையானது இவ்விபத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
![அருண்மொழியின் ஓயாதஅலைகள் அறக்கட்டளை சார்பாக நிவாரண பொருட்கள் !](https://businesstrichy.com/wp-content/uploads/2022/09/அருண்மொழியின்-ஓயாதஅலைகள்-அறக்கட்டளை-சார்பாக-நிவாரண-பொருட்கள்-1-300x169.jpeg)
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருண்மொழியின் ஓயாதஅலைகள் அறக்கட்டளை சார்பாக ஒருமாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைபொருட்கள், காய்கறிகள் , உணவு சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கநிறுவனத் தலைவர் கண.மோகன்ராஜா, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோ.கண்ணன், பரமசிவம், சுரேஷ்குமார் பெ.மு.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்