புத்துயிர் பெற்ற அம்பாசிடர் கார்
அம்பாசிடர் கார், 1960-1990 வரை, ஒரு ‘ஸ்டேட்டஸ் சிம்பலாக’ கருதப்பட்டது. குடியரசு தலைவர், பிரதமர் துவங்கி, பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வந்தனர்.அதன்பின் புதிய பிராண்டு கார்கள் வரவால், இதன் தயாரிப்பு 2014ல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது ‘ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் பியூஜியோ’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து, அம்பாசிடர் காருக்கு புத்துயிர் ஊட்டும் முடிவில் சென்னையிலுள்ள சி.கே.பிர்லா குழுமத்தின் அங்கமான ‘ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்’ நிறுவன ஆலையில் புதிய அம்பாசிடர் கார் தயாரிக்கப்பட உள்ளது.
இது குறித்து, அந்நிறுவனஇயக்குனர், புதிய அம்பாசிடர் காரின் புதிய இன்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு பணிகளில் குறிப்பிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.