கடந்த மே மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வாயிலாக, 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் 97 ஆயிரத்து, 821 கோடி ரூபாய் வசூல் ஆகியிருந்தது இத்தகவலை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, இது குறைவாகும். கடந்த ஏப்ரலில் வரலாற்று சாதனை அளவாக 1.68 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.இதற்கு முந்தைய மார்ச்சில், 1.42 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது.