கெத்து காட்டும் இந்திய கரன்சி..!
கடந்த ஆண்டில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் அமெரிக்க டாலரில் முதலீடு செய்தனர். கொரோவிற்கு பின் உலக சந்தையில் பொருளாதார முன்னேற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில் தங்கம் மீதான விலை குறைய தொடங்கியதால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏறத் தொடங்கியுள்ளது.
இதனால் நமது நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பின் மதிப்பும் உயர்ந்துள்ளது. பங்குசந்தை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வில் இருந்தால் மட்டுமே நமது நாட்டின் பணமதிப்பு நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.