Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உலகில் நம்நாடும் முன்னேற…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உலகில் நம்நாடும் முன்னேற…

இன்றைய கால சூழலில் முனைவர் பட்டம் (பி.எச்டி) பெறுவதற்காக பலரும் தேர்ந்தெடுக்கும் தலைப்பு இலக்கியம் சார்ந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வகைகளான கதை, கவிதை, சிறுகதை, நாவல் போன்றவை மக்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கும், அறிவை விருத்தி செய்து கொள்வதற்கும் தேவைதான் என்றாலும், முனைவர் பட்டம் பெற நினைப்பவர்கள் அதை ஆய்வு செய்வதால் சமுதாயத்திற்கு பெரும் பலன் ஒன்றும் கிட்டப்போவதில்லை.

ஆராய்ச்சியினால் பயன் ஓர் ஆராய்ச்சி தனிமனிதனுக்கும் சமூகத்துக் கும் பயன்படுவதாக இருக்க வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகளுக்கு நீங்கள் பயணம் செய்தால், அவர்கள் ஆய்வுக் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

3

தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவம், விவசாயம், பொருளாதாரம் போன்ற மனித சமுதாயத்திற்கு மிகுந்த பலன் தரக்கூடிய துறைகளையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அங்கெல்லாம் புதுப்புது கண்டுபிடிப்பு நிகழ்வதற்குக் காரணமே இத்தகைய ஆய்வுதான். இத்தகைய புதுக்கண்டுபிடிப்புகளால் அந்நாடுகளின் பொருளாதாரம் அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நமது நாட்டு பல்கலைக்கழகங்கள் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். சுதந்திரத்திற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பிறகு 20 ஆண்டுகள் வரையும் நமது நாட்டுப்பல்கலைக் கழகங்கள் மேற்சொன்ன தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. உதாரணத்திற்கு ஒரு நிகழ்வை குறிப்பிடலாம்.

பல்கலை பேராசிரியரின் அனுபவம் சுதந்திரத்திற்கு முன்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர் கில்பர்ட். அச்சமயத் தில் கும்பகோணம் நகர பகுதிகளில் குழந்தைப்பிறப்பு விகிதம் குறைந்திருந்தது. ஆணின் இறப்பு விகிதம் அதிகரித்திருந்தது. இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து தனது முனைவர் பட்டத்துக்காக ஆய்வை மேற்கொண்டார்.

அந்த ஆய்வின் முடிவில் உண்மை தெரிந்தது. அப்பகுதியில் பெண்களுக்கு புதிய வகையான பால்வினை நோய் பரவி இருந்தது. இதன் விளைவாக ஆண் இறப்பு விகிதம் அதிகரித்தது. மேலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது. இந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் அரசு சுகாதாரத்துறை துரித நடவடிக்கை மேற் கொண்டது. இதனால் அப்பால்வினை நோய் ஒழிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஆய்வுகள்தான் நமது நாட்டுக்கு தேவை.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.